தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சீர்காழி அருகே அரசு மதுபானக் கடை ஊழியர்கள் 5 பேர் கைது! - சீர்காழி அருகே அரசு மதுபானக் கடை ஊழியர்கள் ஐந்து பேர் கைது!

நாகப்பட்டினம்: சட்டவிரோதமாக மது விற்க முயன்ற அரசு மதுபானக் கடை ஊழியர்கள் ஐந்து பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.

சீர்காழி அருகே அரசு மதுபானக் கடை ஊழியர்கள் ஐந்து பேர் கைது!
சீர்காழி அருகே அரசு மதுபானக் கடை ஊழியர்கள் ஐந்து பேர் கைது!

By

Published : Mar 25, 2020, 4:23 PM IST

கரோனா வைரஸ் தொற்று பரவுதலை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் ஏப்ரல் 14ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால், அரசு மதுபானக்கடைகளை மூட தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. கரோனா தொற்றால் நாடே வெறிச்சோடி காணப்படும் நிலையில், ஒரு சில இடங்களில் சட்டவிரோதமாக மது விற்பனை அமோகமாக நடைபெறுகிறது.

அந்த வகையில், நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழி கொள்ளிடம் கடைக்கண் விநாயகநல்லூரில் அரசுக்குச் சொந்தமான மதுபானக் கடை உள்ளது. அக்கடையின் மேற்பார்வையாளர் இளஞ்செழியன், விற்பனையாளர் காமராஜ், உதவியாளர்கள் வெற்றிவீரன், மகேந்திரன், வீரராஜ் உள்ளிட்ட 5 பேர் கள்ளச்சந்தையில் மதுபான பாட்டில்களை விற்பனை செய்ய கடையிலிருந்து காரில் ஏற்றி உள்ளனர்.

சீர்காழி அருகே அரசு மதுபானக் கடை ஊழியர்கள் ஐந்து பேர் கைது!

இதையறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று 5 பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இதையும் படிங்க...இமாச்சலில் புதிதாக 912 பேர்...! - மாநில அரசு தகவல்

ABOUT THE AUTHOR

...view details