தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

’வரும் ஆண்டு 5,000 பேரை ஹஜ் யாத்திரை அனுப்ப முயற்சி’ - Nagore Najmuddin Appreciation Ceremony

மயிலாடுதுறை: வரும் ஆண்டு ஐந்தாயிரம் பேரை ஹஜ் யாத்திரை அனுப்ப முயற்சி மேற்கொள்ளப்படுவதாக தமிழ்நாடு ஹஜ் குழு மாநில சிறப்பு உறுப்பினர் நாகூர் நஜூமுதீன் தெரிவித்துள்ளார்.

நாகூர் நஜூமுதீன்
நாகூர் நஜூமுதீன்

By

Published : Oct 17, 2020, 8:20 PM IST

தமிழ்நாடு ஹஜ் குழு மாநில சிறப்பு உறுப்பினராக நாகை மாவட்டத்தைச் சேர்ந்த நாகூர் நஜூமுதீன் அண்மையில் நியமிக்கப்பட்டார். அவருக்கு மயிலாடுதுறை மாவட்டம் நீடூரில் இன்று பாராட்டு விழா நடைபெற்றது.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர், “தமிழ்நாடு ஹஜ் கமிட்டி மாநில சிறப்பு உறுப்பினராக தமிழ்நாடு முதலமைச்சரால் நியமிக்கப்பட்டுள்ளேன். இதற்குப் பரிந்துரைத்த ஹஜ் கமிட்டி தலைவர் ஜப்பார், ஊரக தொழில் துறை அமைச்சர் பெஞ்சமின் ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

வருங்காலத்தில் ஹஜ் பயணிகள் வசதிக்காக பல்லாவரத்திலிருந்து ஏர்போர்ட் செல்லும் வழியில் ஹஜ் ஹவுஸ் கட்ட தமிழ்நாடு முதலமைச்சர் ரூ.15 கோடி நிதி ஒதுக்கியுள்ளார். இதற்காக இடம் பார்க்கப்பட்டு பரிசீலனையில் உள்ளது. அது விரைவில் கட்டப்பட வாய்ப்புள்ளது.

கடந்த ஆண்டு 15 ஆயிரம் நபர்கள் ஹஜ் யாத்திரை அழைத்துச் செல்ல விண்ணப்பித்திருந்த நிலையில், 3,700 பேர் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு அனுப்பப்பட்டனர். வரும் ஆண்டு குறைந்தது 5000 நபர்களை அனுப்ப முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக மத்திய அமைச்சர், தமிழ்நாடு முதலமைச்சரைச் சந்தித்து கோரிக்கை விடுக்கவுள்ளோம்

நாகூர் நஜூமுதீன் பேசிய காணொலி

ஹஜ் ஹவுஸ் கட்டும் பணியை விரைந்து முடிக்க தமிழ்நாடு முதலமைச்சர் ஏற்பாடு செய்ய வேண்டும். கடந்த 20 ஆண்டுகளாக பொது சேவையில் இருந்து வரும் என்னை சிறப்பு உறுப்பினராக ஆக்கிய தமிழ்நாடு முதலமைச்சர் நன்றி” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:திருச்சியில் அதிமுகவின் 49ஆம் ஆண்டு தொடக்க விழா கொண்டாட்டம்

ABOUT THE AUTHOR

...view details