தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நாகையில் வீட்டருகே நிறுத்திவைக்கப்பட்டிருந்த சொகுசு காரில் ஏற்பட்ட திடீர் தீ! - Nagappattinam Police

நாகப்பட்டினம்: நாகை அருகே வீட்டில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த சொகுசு கார், திடீரென தீப்பிடித்து எரிந்தது. தீ விபத்துக்கான காரணம் குறித்து வேளாங்கண்ணி காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.

காரில் ஏற்பட்ட திடீர் தீ
காரில் ஏற்பட்ட திடீர் தீ

By

Published : Mar 10, 2021, 8:09 PM IST

நாகை மாவட்டம் வேளாங்கண்ணி மெயின்ரோடு பகுதியைச் சேர்ந்த ஆரோக்கியசாமி என்பவர் நேற்று (மார்ச் 9) மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இந்நிலையில் அவருக்குச் சொந்தமான சொகுசு கார் அவரது வீட்டு வாசலில் வழக்கம்போல் நிறுத்திவைக்கப்பட்டிருந்தது.

சொகுசு காரில் ஏற்பட்ட திடீர் தீ

இந்த நிலையில் திடீரென கார் தீப்பிடித்து எரிந்தது. புகைமூட்டதுடன் கார் தீப்பிடித்து எரிவதைக் கண்ட பொதுமக்கள் தீயணைப்பு வீரர்களுக்குத் தகவல் தெரிவித்து, தீயை அணைக்க முயன்றனர்.

பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த நாகை தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி, தீயை அணைத்தும் கார் எரிந்து நாசமானது. இதைத்தொடர்ந்து கார் தீப்பிடித்து எரிவதற்கான காரணம் குறித்து, காவல் துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டுவருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details