நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த மருதூர் தெற்கு கிராமத்தை சேர்ந்தவர் சுமதி. இவருடைய கணவர் கவிஞர் கோவிந்தராஜ் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்ட நிலையில், சுமதி சமையல் வேலை பார்த்து அதில் வரும் சொற்ப வருமானத்தில், தனது நான்கு பெண் குழந்தைகள் மற்றும் வயது முதிர்ந்த தனது மாமனாரை கவனித்து வருகிறார்.
இந்நிலையில், தனது மூத்த மகள் அன்புமணி தன் தந்தையைப் போல் பள்ளிப் படிப்பின் போது இலக்கியம் சார்ந்த பாடல், கவிதை, பேச்சு உள்பட அனைத்திலும் ஆர்வத்துடன் பங்கேற்று பரிசுகளை குவித்துள்ளார்.
மேலும், இசை திறனை வளர்க்க திருவையாறு அரசு இசைக் கல்லூரியில் இளங்கலை பட்டப் படிப்பை படித்துவருகிறார். இந்த சூழலில், இசை பயில கல்லூரியில் மாணவர்களை வீணை வாங்க அறிவுறுத்தியுள்ளனர்.