தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பாலியல் தொழிலில் ஈடுபட்ட ஆறு பேர் கைது! - நீதிமன்றத்தில் ஆஜர்

நாகப்பட்டினம்: சீர்காழியில் பாலியல் தொழிலில் ஈடுபட்ட ஆறு பேரை தனிப்படை காவலர்கள் கைது செய்தனர்.

Sex workers arrested
Sex workers in nagapattinam

By

Published : Jun 6, 2020, 11:29 PM IST

நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழி அருகே தென்பாதியை சேர்ந்த ராஜேந்திரன், சித்ரா தம்பதியினர் வீட்டில் பாலியல் தொழில் நடைபெறுவதாக நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினத்திற்கு தகவல் கிடைத்துள்ளது.

இந்தத் தகவலின் பேரில் தனிப்படை காவலர்கள் மாறுவேடத்தில் சித்ரா வீட்டிற்கு சென்றுள்ளனர். அப்பொழுது சித்ரா, புஷ்பா, முத்துக்குமார் ஆகிய மூன்று பேரும் சேர்ந்து ராஜேஸ்வரி, அமிர்தவள்ளி, கௌசல்யா ஆகியோரை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியது தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து ஆறு பேரையும் தனிப்படை காவலர்கள் கைது செய்து சீர்காழி காவல் நிலையத்தில் ஒப்படைத்து வழக்குப் பதிவு செய்து சீர்காழி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.

சித்ரா, புஷ்பா, முத்துக்குமார் மூன்று பேரை 15 நாள் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார் மற்ற மூன்று பேரையும் ஜாமீனில் விடுவித்தார், இச்சம்பவம் சீர்காழியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையும் படிங்க:சிறுமியை வன்புணர்வு செய்த முதியவர் கைது!

ABOUT THE AUTHOR

...view details