தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jul 27, 2022, 3:47 PM IST

ETV Bharat / state

அப்துல்கலாமின் நினைவு நாள் - ஓவியம் வரைந்து நினைவஞ்சலி செலுத்திய மாணவர்கள்!

மயிலாடுதுறையில் ஏபிஜே அப்துல்கலாமின் நினைவுதினத்தை முன்னிட்டு 250-க்கும் மேற்பட்ட மாணவர்கள் அப்துல்கலாமின் ஓவியத்தை வரைந்து நினைவஞ்சலி செலுத்தினர்.

அப்துல் கலாம் ஒவியம் வரைந்த பள்ளி மாணவர்கள்
அப்துல் கலாம் ஒவியம் வரைந்த பள்ளி மாணவர்கள்

மயிலாடுதுறை:சேந்தங்குடி குருமூர்த்தி அரசு உதவிபெறும் நடுநிலைப்பள்ளியில் இன்று (ஜூலை 27) மயிலாடுதுறை கிங்ஸ் ரோட்டரி சங்கம் சார்பில் ஏபிஜே அப்துல்கலாம் நினைவுதினத்தை முன்னிட்டு மாணவர்களின் ஓவியாஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது.

சூரிய ஒளியில் ஓவியம் வரையும் மயிலாடுதுறையைச்சேர்ந்த விக்னேஷ் என்ற இளைஞர், பென்சில் ஆர்ட் மூலம் அப்துல் கலாம் ஓவியத்தை வரைந்தார். அதனைப்பார்த்து பள்ளிக்குழந்தைகள் 250க்கும் மேற்பட்டோர் அப்துல்கலாமின் ஓவியத்தை வரைந்தனர்.

தொடர்ந்து அப்துல்கலாம் ஓவியத்திற்கு மலர்த்தூவி அஞ்சலி செலுத்தினர். நிகழ்ச்சியில் கிங்ஸ் ரோட்டரி சங்க நிர்வாகிகள் சுந்தரமூர்த்தி, ஐயா சாமி, பள்ளி தாளாளர் மு. ஞானவேலன் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்று அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து சிறப்பான ஓவியம் வரைந்த மாணவ-மாணவிகளுக்குப்பரிசுகளும் வழங்கப்பட்டன.

அப்துல்கலாமின் நினைவு நாள் - ஓவியம் வரைந்து நினைவஞ்சலி செலுத்திய மாணவர்கள்!

இதையும் படிங்க:அரசு பள்ளிகளில் காலை சிற்றுண்டிக்கான அரசாணை வெளியீடு - இனி காலை மெனு இதுதான்!

ABOUT THE AUTHOR

...view details