புதுச்சேரி மாநிலம், காரைக்கால் திருநள்ளாற்றில் அமைந்துள்ளது உலக பிரசித்தி பெற்ற தர்ப்பாரண்யேஸ்வர் ஆலயம். இங்கு சனீஸ்வரன் பகவான் தனி சன்னதியில் அருள்பாலித்து வருகிறார்.
இக்கோயிலில் இரண்டரை ஆண்டுகளுக்கு ஒரு முறை சனி பெயர்ச்சி விழா வெகு விமர்சையாக நடைபெறும். இந்த ஆண்டு சனி பெயர்ச்சி விழா டிசம்பர் 27 ஆம் தேதி நடைபெறுகிறது.
தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு பிரவேசிக்கும் சனி பகவான் பெயர்ச்சி அடைவதையடுத்து இன்று திருநள்ளாறு கோயிலில் கொடி மரத்திற்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.