நாகை மாவட்டம் மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு முதன்முறையாக ஆர்டிபிசிஆர் கருவி வந்தடைந்தது. தமிழ்நாட்டில் கரோனா பரிசோதனைகளை விரிவுபடுத்தும் முயற்சியாக அதிகளவில் ஆர்டி-பிசிஆர் கருவிகளைச் சுகாதாரத் துறை கொள்முதல் செய்துள்ளது.
இதையடுத்து, கரோனா சிறப்பு வார்டு செயல்படும் மருத்துவமனைகளுக்கு ஆர்டி-பிசிஆர் கருவி அனுப்பிவைக்கப்பட்டுவருகிறது. அவ்வகையில் மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு ரூ.37 லட்சம் மதிப்புடைய புதிய ஆர்டி-பிசிஆர் கருவி வந்தடைந்தது. கரோனா வார்டில் நிறுவப்பட்டுள்ள இக்கருவியை இயக்குவதற்கான மைக்ரோ பயாலஜிஸ்ட், லேப் டெக்னிசியன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.