நாகப்பட்டினம் நகராட்சியில் நாகை முதல் நாகூர் வரையிலான தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக ஆடு, மாடு, குதிரை உள்ளிட்ட கால்நடைகள் சுற்றி திரிகின்றன. இதனால் வாகன ஓட்டிகள் அவதி அடைவதுடன் விபத்துகளும் அதிகரித்து வருகின்றன.
இதன் காரணமாக கால்நடைகளின் உரிமையாளர்கள் தங்களது கால்நடைகளை வீட்டில் கட்டி பராமரிக்க வேண்டும் என்றும் சாலைகளில் போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நாகை நகராட்சி ஆணையர் ஏசுராஜ் தெரிவித்துள்ளார்.