தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மயிலாடுதுறை, சீர்காழி சட்டப்பேரவை அலுவலகங்களுக்கு சீல்! - நாகப்பட்டினம் மாவட்டச்செய்திகள்

நாகப்பட்டினம்: தமிழ்நாட்டில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்த நிலையில் மயிலாடுதுறை, சீர்காழி சட்டப்பேரவை அலுவலகங்களை வட்டாட்சியர்கள் முன்னிலையில் வருவாய்த்துறையினர் இன்று (பிப்.27) சீல் வைத்தனர்.

Revenue officers sealed the assembly offices, assembly offices sealed in mayiladuthurai and sirkazhi, Enforcement of Rules of Electoral Conduct, Mayiladuthurai, Sirkazhi,  சட்டப்பேரவை அலுவலகங்களுக்கு வருவாய்த்துறையினர் சீல் வைப்பு, மயிலாடுதுறை சீர்காழி சட்டப்பேரவை அலுவலகங்களுக்கு சீல் வைப்பு, மயிலாடுதுறை, சீர்காழி, நாகப்பட்டினம் மாவட்டச்செய்திகள், நாகப்பட்டினம்
revenue-department-seals-mayiladuthurai-and-sirkazhi-assembly-offices-in-the-presence-of-governors

By

Published : Feb 27, 2021, 7:10 PM IST

தமிழ்நாட்டில் ஏப்ரல் 6ஆம் தேதி தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதனைத் தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தன. இந்நிலையில் இன்று (பிப்.27) மயிலாடுதுறை சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகத்தை வருவாய் துறையினர் பூட்டி சீல் வைப்பதாக தெரிவித்தனர்.

மயிலாடுதுறை சட்டப்பேரவை அலுவலகத்திற்கு வருவாய்த்துறையினர் சீல்

அதனால் அலுவலகத்தில் உள்ள பொருள்களை அதிமுகவினர் அப்புறப்படுத்தினர். அதைத்தொடர்ந்து, மயிலாடுதுறை சட்டப்பேரவை அலுவலகத்தை வட்டாட்சியர் பிரான்ஸ்வா முன்னிலையில் வருவாய் துறையினர் பூட்டி சீல் வைத்தனர்.

இதேபோல், சீர்காழி சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகத்தை வட்டாட்சியர் ஹரிதரன் முன்னிலையில் வருவாய் துறையினர் பூட்டி சீல்‌ வைத்தனர்.

இதையும் படிங்க:தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல் - அரசியல் பதாகைகளை இரவோடு இரவாக அகற்றிய அதிமுகவினர்!

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details