மயிலாடுதுறை:குத்தாலம் தாலுகா, சேத்திரபாலபுரம் ஊராட்சியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் முன்னாள் மாவட்டச் செயலாளர் ஈழவளவன், ஒஎன்ஜிசி கிணறுகள் மூலம் அப்பகுதியில் மக்களுக்கு நோய்ப்பாதிப்புகள் ஏற்பட்டு வருவதாகவும் அதனால், அவற்றின் பாதிப்பிலிருந்து மக்களைப் பாதுகாக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தும் பாதிக்கப்பட்ட கிராம மக்களுடன் சேர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார்.
அப்போது, செய்தியாளர்களிடத்தில் பேசிய அவர், 'குத்தாலம் தாலுகா, சேத்திரபாலபுரம் ஊராட்சியில் ராமாமிர்தம் தெரு, குப்பையன் காலனி, சோனாந்திடல் ஆகியத் தெருக்களில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதியின் அருகே ஒஎன்ஜிசி எண்ணெய் மற்றும் எரிவாயு சேமிப்புக் கிடங்கு உள்ளது.
எண்ணெய் கலந்த குடிநீர்
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள எண்ணெய்க் கிணறுகளில் இருந்து எடுக்கப்படும் வாயு மற்றும் எண்ணெய் இங்கு சேமிக்கப்பட்டு பின்னர், சுத்திகரிப்பு செய்து காரைக்கால் மாவட்டத்தில் உள்ள நரிமணத்திற்கு அனுப்பப்படுகிறது.
இந்தப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ஒஎன்ஜிசியால், பல ஆண்டுகளாக குடிநீர் தட்டுப்பாடு உள்ளதாகவும்; கடந்த 1 ஆண்டுக்கும் மேலாக குடிநீரில் கடுமையான காவி படிந்தும், எண்ணெய் கலந்தும் வருவதால் தொடர்ச்சியாக பல்வேறு நோய்களுக்கு ஆளாவதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
சுகாதாரக் கேடு - பாதிப்பில் மக்கள்