மயிலாடுதுறை: தரங்கம்பாடி தாலுகா திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான அமிர்தகடேஸ்வரர் கோவில் உள்ளது. சிறப்பு வாய்ந்த இத்தலத்தில் ஆயுள் விருத்தி வேண்டி குடும்பத்தினருடன் வந்து வயதான தம்பதிகள் 60 வயதில் உக்ரரத சாந்தி, 61 வயதில் சஸ்டியப்பதபூர்த்தி, 70 வயதில் பீமரதசாந்தி, 80 வயதில் சதாபிஷேகம், 90 வயதில் கனகாபிஷேகமும், 100வயது முடிந்தவர்கள் பூர்ணாபிஷேகம் உள்ளிட்ட பல்வேறு திருமணங்கள் தினந்தோறும்’ ஆலயத்தில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இன்று சீர்காழி எடமணல் மேலபாளையத்தை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி -கோமளவல்லி தம்பதியினர் 100 வயது முடிந்து 101 வயது தொடங்கியதை முன்னிட்டு திருக்கடையூர் ஆலயத்தில் பூர்ணாபிஷேக விழா இன்று நடைபெற்றது.