மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன், மயிலாடுதுறையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், ”தமிழ்நாடு மக்களைப் பற்றி சிந்திக்காமல் தொடர்ந்து ஹைட்ரோ கார்பன் திட்டங்களை மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனை மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு வன்மையாகக் கண்டிக்கிறது.
புதிதாக நான்கு கிணறுகள் அமைக்கப்படவுள்ளன. அதன்படி, நாகையில் உள்ள மாதானம், திருவாரூரில் உள்ள நன்னிலம், கடலூர் புவனகிரி, தஞ்சையில் பந்தநல்லூர் ஆகிய பகுதிகளில் கிணறுகள் அமைக்கப்படவுள்ளன.
இதில், இரண்டு இடங்களில் ஏற்கனவே திட்டப்பணிகள் நடைபெற்றுவருவதாகவும், தமிழ்நாட்டில் மேலும் 23 இடங்களில் கிணறுகள் அமையவுள்ளதாகவும் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறுகின்றார்.
இதுதொடர்பாக தமிழ்நாடு சட்டப்பேரவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு சி.வி. சண்முகம் அளித்த பதில் திருப்திகரமாக இல்லை. எண்ணெய் நிறுவனங்கள் விண்ணப்பங்களை அளித்துள்ளனர். இதை ஏற்க முடியாது என்று கூறும் தமிழ்நாடு அரசு ஏன் இதுவரை அதிகாரப்பூர்வமாக விண்ணப்பங்கள் நிராகரிக்கவில்லை ?