தமிழ்நாடு

tamil nadu

காணும் பொங்கலை முன்னிட்டு சிறுவர்களுக்கு விளையாட்டு போட்டிகள்

By

Published : Jan 17, 2020, 11:54 PM IST

நாகை: காணும் பொங்கலை முன்னிட்டு பல்வேறு இடங்களில் நடைபெற்ற விளையாட்டு போட்டிகளில் சிறுவர், சிறுமியர் உற்சாகத்துடன் பங்கேற்றனர்.

மயிலாடுதுறையில் காணும் பொங்கலை முன்னிட்டு விளையாட்டு போட்டிகள்
மயிலாடுதுறையில் காணும் பொங்கலை முன்னிட்டு விளையாட்டு போட்டிகள்

நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் காணும் பொங்கலை முன்னிட்டு பல்வேறு இடங்களில் விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஆர்வமுடன் போட்டிகளில் கலந்து கொண்டனர்.

இதன் ஒரு பகுதியாக புதுத்தெரு பகுதியில் சிறுவர்களுக்கான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. ஓடிச் சென்று பாட்டிலில்தண்ணீர் நிரப்பும் போட்டியில் சிறுவர் சிறுமியர் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். மேலும் ஓட்டப்பந்தயம், ஓவியப்போட்டி, கட்டுரை போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகளும் நடைபெற்றது.

மயிலாடுதுறையில் காணும் பொங்கலை முன்னிட்டு விளையாட்டு போட்டிகள்

பெற்றோர்களும் பொதுமக்களும் போட்டியாளர்களை உற்சாகப்படுத்தினர். இதேபோல் எம்.ஜி.ஆர் நகரில் சைக்கிளில் மெதுவாக செல்லும் போட்டி நடைபெற்றது. இது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

இதையும் படிங்க:

திமுக - காங்கிரஸ் கருத்து வேறுபாடு குறித்து கமல்ஹாசன்

ABOUT THE AUTHOR

...view details