காரைக்காலில் ஊரடங்கு உத்தரவு, கரோனா தொற்று சிகிச்சை குறித்து அரசு அலுவலர்களின் ஆலோசனைக் கூட்டம் புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் இன்று நடைபெற்றது.
காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில், புதுச்சேரி நல்வாழ்வுத் துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ், நலத் துறை அமைச்சர் கந்தசாமி, வேளாண் அமைச்சர் கமலக்கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பின்னர், காரைக்கால் மார்க் துறைமுகம் சார்பில் 40 லட்சம் ரூபாய் மதிப்பிலான கரோனா சம்பந்தமான வென்டிலேட்டர் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களை புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி முன்னிலையில் காரைக்கால் அரசு மருத்துவமனைக்கு வழங்கினர்.
அதனைத் தொடர்ந்து காரைக்கால் அரசு பொது மருத்துவமனைக்குச் சென்ற புதுச்சேரி முதலமைச்சர், மருத்துவர்களிடம் தற்போதைய நிலை குறித்து கேட்டறிந்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது,