மயிலாடுதுறை நகரில் 9-ஆம் வகுப்பு படித்துவரும் சிறுமி ஒருவரை கடந்த மாதம் 18-ஆம் தேதியன்று உறவினர் ஒருவர் கடத்திச் சென்றுவிட்டதாக சிறுமியின் தந்தை மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
அப்புகாரின்பேரில் மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல்நிலைய ஆய்வாளர் கோப்பெருந்தேவி வழக்குப் பதிவுசெய்து கடத்தப்பட்ட சிறுமியை தேடிவந்தார்.
இந்நிலையில் சிறுமியை கடத்தியதாக மயிலாடுதுறை செங்கமேட்டுத்தெருவை சேர்ந்த சங்கர்(21) என்ற இளைஞரை கைதுசெய்த காவல்துறையினர், அவரிடமிருந்த சிறுமியை மீட்டு மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.