நாகை மாவட்டம் பனங்குடி பகுதியில் செயல்பட்டுவந்த மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனமான சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (CPCL) நிறுவனம் கடந்த ஒரு ஆண்டு காலமாக எண்ணெய் சுத்திகரிப்பை நிறுத்திவைத்திருந்தது.
சிபிசிஎல் விரிவாக்கப் பணிகள் 31 ஆயிரத்து 580 கோடி ரூபாய் மதிப்பில் தொடங்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனத்தின் தலைவர் வைத்யா கடந்த மாதம் டெல்லியில் அறிவித்தார்.
இந்த நிலையில் 1,300 ஏக்கர் பரப்பளவில் ஆண்டுக்கு ஒன்பது மில்லியன் மெட்ரிக் அளவிலான எண்ணெய் சுத்திகரிக்கும் திட்டத்தை, பிரதமர் நரேந்திரமோடி காணொலி வாயிலாக நேற்று (பிப். 17) தொடங்கிவைத்தார்.