நாகை மாவட்டம் திருக்குவளை, அதனை சுற்றியுள்ள பெரும்பாலான பகுதிகளில் தற்பொழுது சம்பா சாகுபடி மும்முரமாக நடைபெற்றுவருகிறது. ஒருசில விவசாயிகள் வேளாண் விரிவாக்க மையத்தில் தங்களுக்குத் தேவையான விதைநெல்லை வாங்கினாலும்கூட, பல விவசாயிகள் தங்களுக்கு தேவையான விதை நெல்லினை தனியாரிடமே வாங்குகின்றனர்.
அவ்வாறு தனியாரிடம் வாங்கப்படும் விதை நெல்லில் கௌச்சா என்னும் பூச்சிக்கொல்லி மருந்து விதை நெல்மேல் தெளிக்கப்பட்டு, விவசாயிகளுக்கு வழங்கப்படுவதாகக் கூறப்படுகிறது. அதிக மகசூல், பூச்சிகளின் தாக்குலிலிருந்து பாதுகாத்துக்கொள்ளுதல் போன்ற நன்மைகளுக்காகக் கௌச்சாப் பூச்சி மருந்து கலந்த விதைநெல்லினை வாங்கி விவசாயிகள் பயன்படுத்துகின்றனர். ஆனால் விதை நெல் வயலில் தெளிக்கப்பட்டவுடன், அதை உண்ண வரும் புறாக்கள், நாற்றாங்குருவிகள், தவிட்டுக்குருவிகள் ,அணில்கள் ,கோழிகள், மயில்கள் உள்ளிட்ட பல பறவைகளும், உயிரினங்களும் கௌச்சா பூச்சிமருந்தில் உள்ள நச்சுத் தன்மையால் உயிர் இழந்துவருகின்றன.