மயிலாடுதுறை: புகழ்பெற்ற 108 வைணவ திவ்ய தேசங்களில் 22ஆவது ஆலயமும், பஞ்சரங்க ஆலயங்களில் ஐந்தாவது ஆலயமுமாக திருஇந்தளூரில் ஸ்ரீ பரிமள ரெங்கநாதர் ஆலயம் அமைந்துள்ளது. ஆலயத்தில் வைகுண்ட ஏகாதசி விழா வரும் 13ஆம் தேதி நடைபெறுகிறது.
இதனை முன்னிட்டு பகல்பத்து முதல்நாள் நிகழ்ச்சி இன்று (ஜனவரி 3) தொடங்கியது. பெருமாள் சர்வ அலங்காரத்தில் மகாலட்சுமி பதக்கம் மார்பில் அணிந்து மரகத கிரீடம் தாங்கி உள் பிரகார வீதி உலா எழுந்தருளினார். தொடர்ந்து திருவந்திக்காப்பு மண்டபத்திற்கு எழுந்தருளிய பெருமாளுக்குச் சிறப்பு தீபாராதனைகள் நடத்தப்பட்டன.