தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'ம.பி-யில் தவிக்கும் பிள்ளைகளை மீட்டுத் தாருங்கள்' - பொது போக்குவர்த்து முடக்கம்

மத்தியப் பிரதேச மாநிலத்திலுள்ள நவோதயா பள்ளியில் பயிலும் தங்களது பிள்ளைகளை மீட்டுத்தருமாறு மாணவர்களின் பெற்றோர்கள் காரைக்கால் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.

Parents given petition to Karaikal collector to rescue their children from mathyapradesh
Parents given petition to Karaikal collector to rescue their children from mathyapradesh

By

Published : Apr 14, 2020, 10:12 AM IST

Updated : Apr 14, 2020, 12:28 PM IST

புதுச்சேரி மாநிலம் காரைக்காலைச் சேர்ந்த 9 மாணவிகள் 8 மாணவர்கள் உள்பட 17 மாணவர்கள் மத்தியப் பிரதேச மாநிலம் ரிவா மாவட்டம் சிர்மூர் கிராமத்தில் நவோதயா பள்ளியில் பயின்றுவருகின்றனர்.

கரோனா வைரஸை கட்டுப்படுத்தும் நோக்கில் பொது போக்குவரத்து முடக்கப்பட்டுள்ளதால் இவர்கள் சொந்த ஊருக்கு செல்ல இயலாமல் தவித்துவருகின்றனர். இந்நிலையில், மாணவர்களின் பெற்றோர்கள் காரைக்கால் மாவட்ட ஆட்சியரை சந்தித்து தங்கள் பிள்ளைகளை மீட்டுத் தருமாறு மனு அளித்துள்ளனர்.

மாணவர்களின் பெற்றோர்கள் காரைக்கால் ஆட்சியரிடம் மனு

அதில், மத்தியப் பிரதேச மாநிலத்தில் தங்களது பிள்ளைகள் எவ்வித அடிப்படை வசதிகளுமின்றி தவித்துவருவதாகவும், அவர்களை போர்க்கால அடிப்படையில் காரைக்கால் அழைத்துவரவேண்டும் எனவும் கோரிக்கைவிடுத்திருந்தனர்.

இதையும் படிங்க: கரோனா எதிரொலி: கொடைக்கானலில் 67 கட்டட தொழிலாளர்கள் மீட்பு

Last Updated : Apr 14, 2020, 12:28 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details