தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

முட்டை வியாபாரிகளிடமிருந்து ரூ.1.41 லட்சம் பறிமுதல் - மயிலாடுதுறை

மயிலாடுதுறை: உரிய ஆவணங்கள் இன்றி முட்டை வியாபாரிகள் கொண்டு சென்ற, 1.41 லட்சம் ரூபாயை தேர்தல் நிலையான கண்காணிப்புக் குழுவினர் பறிமுதல் செய்தனர்.

முட்டை வியாபாரிகளிடம் ரூ.1.41 லட்சம் ரூபாய் தேர்தல் நிலையான கண்காணிப்புக்குழுவினர் பறிமுதல், 1.41 lakh rupees seized from egg traders in mayiladuthurai, election Fixed monitoring team seized 1.41 lakh rupess, மயிலாடுதுறை மாவட்டச்செய்திகள், மயிலாடுதுறை, mayiladuthurai
one lakh forty one thousand -rupees-seized-from-egg-traders-in-mayiladuthurai

By

Published : Mar 9, 2021, 6:32 AM IST

மயிலாடுதுறை சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட குத்தாலத்தில் தனி வட்டாட்சியர் வைத்தியநாதன் தலைமையில் தேர்தல் நிலையான கண்காணிப்புக் குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அவ்வழியே சென்ற முட்டைகளை ஏற்றிய சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ததில் அவ்வாகனத்தில் முட்டை வியாபாரிகள் மதன்பாபு, நரசிம்மன் ஆகியோர் 1.41 லட்சம் ரூபாயை உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்வது தெரியவந்தது.

இதையடுத்து, நிலையான கண்காணிப்புக் குழுவினர் அந்தப் பணத்தை கைப்பற்றி மயிலாடுதுறை வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் பிரான்சுவாவிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து அந்த பணம் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.

இதையும் படிங்க:மயிலாடுதுறையில் வங்கி ஊழியரிகளிடமிருந்து ரூ.25 லட்சம் பறிமுதல்

ABOUT THE AUTHOR

...view details