மயிலாடுதுறை: மாருதி நகரைச் சேர்ந்தவர் கண்ணப்பன் (75). இவர் கடந்த மாதம் 28ஆம் தேதி வங்கி ஒன்றில் ரூ.1.40 லட்சம் பணம் எடுத்துக்கொண்டு வீடு திரும்பும்போது, பின்தொடர்ந்த அடையாளம் தெரியாத நபர்கள் பணத்தைத் தவறவிட்டதாகக் கூறி, அவரது கவனத்தை திசை திருப்பி அவரிடமிருந்த பணத்தை திருடிச் சென்றனர்.
இதுகுறித்து, கண்ணப்பன் மயிலாடுதுறை காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில், காவல் உதவி ஆய்வாளர் இளையராஜா தலைமையிலான தனிப்படை காவல் துறையினர் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.
இந்நிலையில், பேருந்து நிலையம் அருகே நின்றுகொண்டிருந்த ஒரு வாகனத்தில் இருந்த பணத்தை, ஒருவர் திருட முயன்றுள்ளார். அந்த நபரை பொதுமக்கள் பிடித்துக் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.