மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த பன்னிரெண்டாம் வகுப்பு மாணவி, கடந்த 4ஆம் தேதி ரேஷன் அட்டையில் முகவரி மாற்றம் செய்வதற்கு இ-சேவை மையத்திற்கு சென்றுள்ளார். அதன் பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. சிறுமியை அவரது பெற்றோர் எங்கு தேடியும் கிடைக்காத நிலையில், மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
இதுகுறித்து விசாரணை மேற்கொண்டதில், சிறுமியை செங்கல்பட்டு மாவட்டம் சிறுதாவூர் சின்னப்பன் மகன் ராமச்சந்திரன்(21) என்பவர் கடத்தி சென்றது தெரிய வந்தது. இதனையடுத்து காவல் துறையினர் சிறுதாவூர் சென்று சிறுமியை மீட்டதுடன் ராமச்சந்திரனை பிடித்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.