மயிலாடுதுறை மாவட்டத்தில் நிவர் புயல் காரணமாக நள்ளிரவு (நவம்பர் 26) காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. இதன் காரணமாக மயிலாடுதுறை அருகே பேச்சாவடி சாலையில், 50 ஆண்டுகள் பழமைவாய்ந்த மிகப்பெரிய புளியமரம் சாலையின் குறுக்கே வேரோடு சாய்ந்தது.
நிவர் புயல்: வேரோடு சாய்ந்த பழமைவாய்ந்த புளியமரம் - நிவர் புயல் அப்டேட்
மயிலாடுதுறை: நிவர் புயல் காரணமாக மயிலாடுதுறை அருகே பேச்சாவடி பிரதான சாலையிலிருந்த 50 ஆண்டுகள் பழமைவாய்ந்த புளியமரம் வேரோடு சாய்ந்தது.
![நிவர் புயல்: வேரோடு சாய்ந்த பழமைவாய்ந்த புளியமரம் tree](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-9671748-1087-9671748-1606382361685.jpg)
tree
இது குறித்து தகவலறிந்த மயிலாடுதுறை வட்டாட்சியர், காவல் துறையினர், அலுவலர்கள் சம்பவ இடத்துக்கு வந்து, சாலையின் குறுக்கே விழுந்துகிடந்த மரத்தை அகற்ற நடவடிக்கை மேற்கொண்டனர்.
இதனால் அப்பகுதியில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்தச் சாலையில் இதுபோன்று சாய்ந்து விழும் அபாய நிலையில் உள்ள மரங்களை அகற்ற பொதுமக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.