தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தந்தை பெரியார் திராவிடர் கழக நிர்வாகியின் பெயர் ரவடி பட்டியலில் சேர்ப்பு - Periyar is the wealth that opposed methane and hydrocarbon project

நாகப்பட்டினம்: ஹைட்ரோ கார்பன், மீத்தேன் திட்டத்திற்கு எதிராக போராடிய தந்தை பெரியார் திராவிடர் கழக நிர்வாகியின் பெயர் ரவுடி பட்டியலில் சேர்க்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

periyar selvam
periyar selvam

By

Published : Mar 11, 2020, 7:09 PM IST

நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழி பகுதியைச் சேர்ந்தவர் பெரியார் செல்வம். இவர் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் நாகை மாவட்ட செயலாளராக உள்ளார். கடந்த மூன்று ஆண்டுகளில் ஹைட்ரோ கார்பன், மீத்தேன் உள்ளிட்ட திட்டங்களுக்கு எதிராகவும், மத்திய மாநில அரசுகளை கண்டித்தும் சாலை மறியல், உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டுள்ளார்.

நாகை ஆட்சியரை சந்தித்து மனு அளித்த பெரியார் செல்வம்

இந்நிலையில், சீர்காழி காவல் நிலையத்தில் இவரது பெயர் ரவுடிகளின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. இதனால், அதிர்ச்சியடைந்த அவர் தனது குடும்பத்துடன் நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியரை சந்தித்து ரவுடிகளின் பட்டியலிலிருந்து தனது பெயரை நீக்கும்படி மனு அளித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பொதுமக்களின் பிரச்னைக்களுக்காக சமூக அவலங்களை எதிர்த்து தொடர்ந்து போராடியதற்காக என் மீது பொய் வழக்குகள் பதியப்பட்டு ரவுடி பட்டியலில் சேர்த்துள்ளனர் என்று குற்றஞ்சாட்டினார்.

இதையும் படிங்க:‘என் கக்கூஸ் கழுவகூட நீ லாயக்கில்ல’ - காவல் ஆய்வாளர் மீது மனித உரிமைகள் ஆணையத்தில் புகார்

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details