தமிழ்நாட்டில் சிலர் பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பில் இருப்பதாக தேசிய புலனாய்வு முகமை அலுவலர்களுக்கு (என்ஐஏ) ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் மாநிலம் முழுவதும் இரண்டாவது நாளாக என்ஐஏ அலுவலர்கள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இதேபோல் நேற்று நாகப்பட்டினம் மாவட்டம் நாகூரில் முகமது அஜ்மல் என்பவரை தேசிய புலனாய்வு முகமை அலுவலர்கள் நாகூர் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டனர்.
இதனைத்தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்றும் விசாரணை மேற்கொண்டுள்ள அலுவலர்கள் மஞ்சக்கொல்லை பகுதியைச் சேர்ந்த ரிஷாத் அலி, உமர் ஷெரிப் ஆகிய இருவரிடமும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அவர்களிடமிருந்து செல்ஃபோன், சிம் கார்ட் உள்ளிட்ட சில ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.