தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நாகையில் இரண்டாவது நாளாக தொடரும் என்ஐஏ விசாரணை - Nagai Laest News

நாகப்பட்டினம்: பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பில் இருப்பதாக சந்தேகப்படப்படும் நபர்களிடம் தேசிய புலனாய்வு முகமை அலுவலர்கள் (என்ஐஏ) இரண்டாவது நாளாக விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

சோதனை மேற்கொள்ளும் என்ஐஏ அலுவலர்கள்

By

Published : Nov 1, 2019, 5:53 PM IST

தமிழ்நாட்டில் சிலர் பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பில் இருப்பதாக தேசிய புலனாய்வு முகமை அலுவலர்களுக்கு (என்ஐஏ) ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் மாநிலம் முழுவதும் இரண்டாவது நாளாக என்ஐஏ அலுவலர்கள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இதேபோல் நேற்று நாகப்பட்டினம் மாவட்டம் நாகூரில் முகமது அஜ்மல் என்பவரை தேசிய புலனாய்வு முகமை அலுவலர்கள் நாகூர் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டனர்.

இதனைத்தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்றும் விசாரணை மேற்கொண்டுள்ள அலுவலர்கள் மஞ்சக்கொல்லை பகுதியைச் சேர்ந்த ரிஷாத் அலி, உமர் ஷெரிப் ஆகிய இருவரிடமும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அவர்களிடமிருந்து செல்ஃபோன், சிம் கார்ட் உள்ளிட்ட சில ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சோதனை மேற்கொள்ளும் என்ஐஏ அலுவலர்கள்

தற்போது தேசிய புலனாய்வு முகமை அலுவலர்கள் விசாரித்து வரும் ரிஷாத் அலி கடந்த சில மாதங்களுக்கு முன்பு என்ஐஏ அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட ஹாரிஸ் முகமதுவின் தம்பி என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:இலங்கை குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக கன்னியாகுமரி இளைஞரிடம் ரகசிய விசாரணை!

ABOUT THE AUTHOR

...view details