நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த ஆயக்காரன்புலம் பகுதியைச் சேர்ந்தவர்கள் சுரோஷ் யோகாம்பிகை தம்பதி. இவர்களுக்கு தரணீஸ்வரன்(3), கதிர்பாலன்(1) என இரண்டு ஆண் குழந்தைகள் இருந்தனர்.
இந்நிலையில், இன்று(ஜூலை 16) காலை சுரேஷ் தனது தாய்க்கு உடல் நலம் சரியில்லாததால் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். பின்னர் அவர் தாயுடன் வீடு திரும்பினார். பின்னர் மனைவி, குழந்தைகளை தேடினார்.
இந்நிலையில் வீட்டின் பின்புறம் இருந்த கிணற்றில், இரு குழந்தைகளும் மனைவியும் உயிருக்கு போராடினார்கள். அவர்கள் மூவரையும் தீயணைப்பு வீரர்கள் மீட்டு, மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.