நாகை மாவட்டம் எரவாஞ்சேரி கிராமத்தில் வசிக்கும் ராஜேந்திரன் , கடந்த 36 ஆண்டுகளாக ஓமன் நாட்டில் தொழில் தொடங்கி தன் குடும்பத்தினருடன் வசித்துவருகிறார். அவர் மட்டுமன்றி எரவாஞ்சேரி சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த 80க்கும் மேற்பட்டோர் ராஜேந்திரன் பணிபுரியும் தொழில் நிறுவனத்தில் வேலைசெய்து பொருளாதாரத்தில் மேம்பாடு அடைந்து எரவாஞ்சேரி கிரமத்தில் வீடு கட்டியுள்ளனர். குறிப்பாக, ராஜேந்திரன் ஒமன் மன்னன் மீது வைத்துள்ள பற்றின் காரணமாக தனது வீட்டையும் வாசல் முகப்பையும் ஓமன் மன்னரின் வீட்டைப் போன்றே வடிவமைத்துக் கட்டியுள்ளார்.
இந்நிலையில், பொங்கல் பண்டிகையைக் கொண்டாடுவதற்காக ராஜேந்திரன் எரவாஞ்சேரிக்கு வந்துள்ள நேரத்தில், கடந்த 10ஆம் தேதி ஓமன் மன்னர் சுல்தான் காபூஸ் பின் சயித் உடல் நலக்குறைவால் காலமானார்.