தமிழ்நாடு

tamil nadu

By

Published : Dec 6, 2021, 7:17 AM IST

ETV Bharat / state

வார்டுகள் மாற்றம்: நகராட்சி தேர்தலை புறக்கணிக்க நாகை மீனவர்கள் முடிவு

வேதாரண்யம் அருகே ஆறுகாட்டுத்துறை கிராமத்தில் வார்டுகள் மாற்றம் செய்யப்பட்டதால் மீனவர்கள் நகராட்சி தேர்தலை புறக்கணிக்க திட்டமிட்டுள்ளனர்.

நகராட்சி தேர்தலை புறக்கணிக்க முடிவு
நகராட்சி தேர்தலை புறக்கணிக்க முடிவு

நாகப்பட்டினம்: வேதாரண்யம் அருகே ஆறுகாட்டுத்துறை மீனவ கிராமத்தில் உள்ள 3, 4 வார்டுகளை 4, 5 வார்டுகளாக மாற்றி நகராட்சி நிர்வாகம் அறிவித்து உள்ளது.

இதுகுறித்து மீனவர்கள் கூறியதாவது, "5-வது வார்டில் வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் வசிக்கின்றனர். மீனவ கிராமத்தில் எந்தவித பிரச்சனை இல்லாமல் வாழ்ந்து வருகிறோம். தற்பொழுது வார்டுகள் மாற்றத்தால் பிரச்சினை ஏற்படும் சூழல் உள்ளது.

நகராட்சி தேர்தலை புறக்கணிக்க முடிவு

எனவே, வரும் நகராட்சி தேர்தலை ஆறுகாட்டுத்துறை மீனவ கிராம மக்கள் புறக்கணிக்க உள்ளோம்" என்றனர்.

இதையும் படிங்க:ஆடுமேய்க்க சென்றவரைப் பிடித்து தாக்கிய காவலர் - பாதிக்கப்பட்டவரின் உறவினர்கள் முற்றுகைப்போராட்டம்

ABOUT THE AUTHOR

...view details