நாகை மாவட்டத்தில், கடந்த ஜனவரி முதல் 250க்கும் மேற்பட்ட நெல் நேரடி கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு, விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில் வெளிமாவட்டங்களில் இருந்து இங்கு நெல் நேரடி கொள்முதல் செய்யப்படுவதாக மாவட்ட நிர்வாகத்தினருக்குத் தகவல் கிடைத்தது.
அதனடிப்படையில் ஆட்சியரின் உத்தரவின்பேரில், நாகை மாவட்ட நுகர்பொருள் வாணிபக் கழக முதன்மை மண்டல மேலாளர் சண்முகநாதன் தலைமையில் ரோந்து பணியில் அலுவலர்கள் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது மயிலாடுதுறை அருகே திருமங்கலம் கிராமத்தில் இயங்கிவரும் நேரடி கொள்முதல் நிலையத்திற்கு வந்த இரண்டு லாரிகளை அலுவலர்கள் சோதனை செய்தனர்.