கரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு 21 நாள் ஊரடங்கு உத்தரவு நேற்று (மார்ச் 24) முதல் அமலுக்கு வந்தது. இதனால் அத்தியாவசிய கடைகள் தவிர பிற கடைகள் மூடப்பட்டன. இதைத் தொடர்ந்து, நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறை நகராட்சியில் பேருந்து நிலையம் உள்ளிட்ட இடங்களில் உணவு கிடைக்காமல் தவித்த ஆதரவற்ற முதியோருக்கு பல்வேறு தன்னார்வ அமைப்பினர் உணவு வழங்கி சேவை பணியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், மயிலாடுதுறை நகராட்சி சார்பில் ஆதரவற்றோருக்கான சமுதாய சமையல்கூடம் அமைக்கப்பட்டு உணவு வழங்கப்பட்டு வருகிறது. தனியார் திருமண மண்டபத்தில் சமைத்து மயிலாடுதுறை பேருந்து நிலையம், ரயில் நிலைய வாயில் உள்ளிட்ட இடங்களில் வாழ்ந்து வரும் ஆதரவற்ற முதியோருக்கு நகராட்சி ஆணையர் அண்ணாமலை தலைமையில் அலுவலர்கள் மதிய உணவுகளை வழங்கினர்.