கரோனா ஊரடங்கு உத்தரவால் மீனவர்கள் பலர் மீன்பிடிக்க கடலுக்குச் செல்லாமல் வாழ்வாதாரம் இழந்துவந்தனர். பின்னர், மத்திய அரசு பைபர் படகுகளின் மூலம் மீனவர்கள் கடலுக்குச் சென்று மீன்பிடிக்கலாம் என அனுமதியளித்ததை அடுத்து இரண்டு நாள்களுக்கு ஒருமுறை மீனவர்கள் தற்போது மீன் பிடிக்கச் சென்றுவருகின்றனர்.
இந்த மீன்களை நாகை மாவட்டம் சீர்காழி அருகே திருமுல்லைவாசல் மீனவப் பெண்கள் கூடைகளில் வைத்து தெருக்கள்தோறும் விற்பனை செய்துவருகின்றனர்.
இந்நிலையில், காவல் துறையினர் மீன் விற்பனைசெய்யும் தங்களைக் கண்டித்து அடித்துவிரட்டுவதாகவும், மீன்வளத் துறை அலுவலர்கள் மீன் விற்பனைக்கு உரிய அனுமதிச்சீட்டு வழங்காமல் அலட்சியப்படுத்துவதாகவும் இதனால் மீன் விற்பனை செய்யமுடியாமல் தங்களது குடும்பம் வறுமையில் வாடுவதாகவும் மீனவப் பெண்கள் குற்றஞ்சாட்டினர்.