கரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் நிலையில், ஊரடங்கு உத்தரவிற்கு முன்பு நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு பிழைப்புக்காக வந்த வெளிமாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் 140 பேர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக தங்க வைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், நாகப்பட்டினம் அரசு தொழிற்பயிற்சி நிலையம், நாகூர் தனியார் பள்ளி உள்ளிட்ட இடங்களில் தங்கியுள்ள அவர்களுக்கு நகராட்சி சார்பாக உணவு, உடை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டன.