தமிழ்நாடு

tamil nadu

By

Published : Feb 10, 2020, 7:44 AM IST

ETV Bharat / state

நாகை, குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக பேரணி

நாகப்பட்டினம்: குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி இஸ்லாமியர்கள் மற்றும்0 பல்வேறு கட்சியினர் குத்தாலத்தில் கண்டன பேரணி நடத்தினர்.

muslims protest in nagapattinam against CAA
muslims protest in nagapattinam against CAA

நாகை மாவட்டம் குத்தாலத்தில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அச்சட்டத்தை திரும்பப்பெற வலியுறுத்தியும் குத்தாலம் ஜமாத்தார்கள் சார்பில் கண்டன பேரணியும் பொதுக்கூட்டமும் நடைபெற்றது.

குத்தாலம் தேரடி மெயின் ரோட்டில் தொடங்கிய பேரணியில் இஸ்லாமியப் பெண்கள், குழந்தைகள் என இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு, தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பியவாறு ஊர்வலமாகச் சென்றனர்.

குத்தாலத்தில் கண்டன பேரணி

இதில் திமுக, மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, நாம் தமிழர் கட்சி என பல்வேறு கட்சியினரைச் சேர்ந்தவர்களும் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க: கிருஷ்ணா நதியை தூய்மைபடுத்த 'மானா கிருஷ்ணா' திட்டம்

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details