நாகப்பட்டினம் மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்காவில் டெல்லி சமய மாநாட்டிற்கு சென்று வந்த மூன்று பேர், அவர்களுடன் தொடர்பில் இருந்த ஒருவர் என நான்கு பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு அவர்கள் வசித்த பகுதிகளான பொறையார், திருக்களாச்சேரி, ஆயப்பாடி பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டன.
இக்காரணத்தினால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் அனைவரும் தனிமைபடுத்தப்பட்டுள்ளனர். அந்த மக்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருள்களை வருவாய்துறையினர், தரங்கம்பாடி பேரூராட்சி நிர்வாகத்தினர் அவர்களின் வீடுகளுக்கே சென்று வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.