நாகப்பட்டினம் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கரோனா தடுப்பு பணிகள் குறித்தும், தடுப்பூசி போடும் பணிகள் குறித்தும் தமிழ்நாடு சுற்றுசூழல் துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் இன்று (மே 30) ஆய்வு மேற்கொண்டார்.
நாகப்பட்டினம் தனியார் கல்லூரியில் செயல்பட்டுவரும் சித்த மருத்துவ சிறப்பு சிகிச்சை மையத்தை ஆய்வு செய்த அவர், அங்கு நோயாளிகளுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை முறைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் பிரவீன் நாயர், மருத்துவர்கள் ஆகியோரிடம் கேட்டறிந்தார்.