தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஓபி சீட்டு எங்கே? சிகிச்சை அளிக்க மறுத்த மருத்துவர்: மயங்கி விழுந்த நோயாளி - doctor negligence cases

மயிலாடுதுறை: ஓபி சீட்டு இல்லாமல் அவசர சிகிச்சையளிக்க மருத்துவர் ஒருவர் மறுக்கும் சமயத்தில், நோயாளி மயங்கி விழும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

அரசு மருத்துவமனை
அரசு மருத்துவமனை

By

Published : Dec 31, 2020, 3:27 PM IST

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா வைதீஸ்வரன்கோவில் பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் புங்கனூர், திருப்புன்கூர், சாவடி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமத்தைச் சேர்ந்தவர்கள் சிகிச்சைக்கு வந்து செல்கின்றனர். இந்நிலையில் வைத்தீஸ்வரன்கோவிலை சேர்ந்த பெண் ஒருவர் திடீரென ஏற்பட்ட உடல்நிலை கோளாறு காரணமாக அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்துள்ளார்.

அப்போது அங்கு பணியிலிருந்த பெண் மருத்துவர் ஓபி சீட் இல்லாமல் சிகிச்சையளிக்க முடியாது என மறுத்துள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. அதில், உடல் நிலை சரியில்லாத பெண்ணின் உறவினர்கள் உடனடியாக சிகிச்சையளிக்கக் கோருகின்றனர். ஆனால் மருத்துவர் மறுக்கவே இருதரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

வைரல் வீடியோ

இதனிடையே உடல்நிலை சரியில்லாத பெண் திடீரென மயங்கி விழுந்துவிட்டார். இருந்தாலும்கூட அவருக்கு சிகிச்சை அளிக்காமல் மருத்துவர் உறவினருடன் வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் பரவி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:இலவச மருத்துவ சிகிச்சை அளிக்கும் மருத்துவருக்கு குவியும் பாராட்டு!

ABOUT THE AUTHOR

...view details