மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்காவில் கரோனா தொற்று பரவல் காரணமாக பல்வேறு பகுதிகளில் வணிகக் கடைகள் அடைக்கப்பட்டு மக்கள் வீடுகளில் முடங்கி இருந்தனர். அரசு அறிவித்த ஊரடங்கில் தளர்வு பிறப்பித்ததில் அனைத்து தரப்பு மக்களும் இயல்பான நிலைக்கு திரும்பினர்.
ஊரடங்கில், நேரக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது கரோனா பரவல் சீர்காழி பகுதியில் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக அப்பகுதியில் உள்ள தனியார் வங்கியின் ஊழியர்கள் கரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.