தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக எஸ்டிபிஐ ஆர்ப்பாட்டம்! - தமிழர் உரிமை இயக்கம்

மயிலாடுதுறை: புதிய தேசியக் கல்விக் கொள்கையைத் திணிக்கும் மத்திய அரசைக் கண்டித்து எஸ்டிபிஐ கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

protest
protest

By

Published : Aug 30, 2020, 12:52 AM IST

மயிலாடுதுறை மாவட்டத்தின் நகராட்சி அலுவலகம் முன்பு மத்திய அரசைக் கண்டித்து எஸ்டிபிஐ கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அக்கட்சியின் மாவட்டத் தலைவர் சபீர் அகமது தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், புதிய தேசியக் கல்விக் கொள்கையை ரத்துசெய்ய வேண்டும், சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கையைக் கைவிட வேண்டும், குற்றச் (கிரிமினல்) சட்டங்களில் திருத்தம் செய்வதைக் கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய அரசுக்கு எதிராக நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் விடுதலைக் கழகம், தமிழர் உரிமை இயக்கம் உள்ளிட்ட அமைப்புகளுடன் மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க:'புதிய கல்வி கொள்கைக்கு எதிராக மவுனப் போராட்டம்' - பாஜக உறுதி

ABOUT THE AUTHOR

...view details