மாவட்டத்திற்கு ஒரு மருத்துவக்கல்லூரி அமைக்கும் அரசின் நடவடிக்கையின் ஒரு பகுதியாக நாகை மாவட்டத்திற்கு மருத்துவக்கல்லூரி அமைக்க அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இந்த மருத்துவக்கல்லூரியை நாகப்பட்டினம் அருகே ஒரத்தூரில் அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இந்நிலையில் மயிலாடுதுறை அடுத்த நீடூர் அரபிக் கல்லூரியின் 21ஏக்கர் நிலத்தை மருத்துவக்கல்லூரி அமைப்பதற்கு தானமாக வழங்க ஒப்புதல் அளித்து மாவட்ட ஆட்சியரிடம் நீடூர் முஸ்லீம் ஜமாத்தார்கள் உறுதிமொழி பத்திரம் அளித்துள்ளனர்.