தமிழ்நாடு

tamil nadu

கடலுக்கு மீன் பிடிக்கச்சென்ற 20 வயது இளைஞர் சடலமாக மீட்பு!

By

Published : Jun 18, 2021, 6:02 PM IST

மயிலாடுதுறை: தரங்கம்பாடி அருகே கடலுக்கு மீன் பிடிக்கச் சென்று மாயமான மீனவ இளைஞர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அக்கிராமத்தினரை வேதனைக்குள்ளாக்கியுள்ளது.

மீன் பிடிக்கச்சென்ற இளைஞர் சடலமாக மீட்பு
மீன் பிடிக்கச்சென்ற இளைஞர் சடலமாக மீட்பு

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா, சந்திரபாடி மீனவர் காலனியைச் சேர்ந்த இளைஞர் தீபக் (20). இவர் சக மீனவரான சாமி, சுந்தரகுமார் ஆகியோருடன் சேர்ந்து புதன்கிழமை (ஜூன்.16) அதிகாலை மூன்று மணியளவில் சந்திரபாடியிலிருந்து மத்தி மீன் பிடிக்க கடலுக்குச் சென்றதாகக் கூறப்படுகிறது. ஒரு கடல் மைல் (Nautical mile) இவர் தூரத்தில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, திடீரென தீபக் காணாமல் போனததால் மற்ற மீனவர்கள் கடலில் தேடியுள்ளனர்.

கடலில் சடலமாக மீட்கப்பட்ட மீனவர்

மீனவர் மாயமானது குறித்து தரங்கம்பாடி கடலோரக் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்ததன்பேரில், காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு கடலில் மீனவரைத் தேடிவந்தனர். தொடர்ந்து இன்று (ஜூன்.18) அதிகாலை சந்திரபாடி மீனவர்கள் பல்வேறு குழுக்களாக பிரிந்து தேடுதல் பணியை தீவிரப்படுத்தினர்.

அப்போது தரங்கம்பாடி அருகே மீனவர் தீபக்கின் உடல் நடுக்கடலில் மிதந்துவந்ததாகக் கூறப்படுகிறது. தொடர்ந்து, மீனவர்கள் தீபக்கின் உடலை படகில் கரைக்கு எடுத்துவந்த நிலையில், தீபக்கின் உடலைப் பார்த்து கிராம மக்கள் கதறி அழுதனர்.

தகவலறிந்த தரங்கம்பாடி கடலோர காவல் நிலைய காவலர்கள் தீபக்கின் உடலைக் கைப்பற்றி உடற்கூராய்வுக்காக பொறையார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டும் வருகின்றனர்.

இதையும் படிங்க:தாம்பரம் ரயில் நிலைய கழிவுப்பொருள் கிடங்கில் தீ விபத்து

ABOUT THE AUTHOR

...view details