விவசாயத்தை கார்ப்பரேட் மயமாக்கும் வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக்கோரி டெல்லியில் நடைபெறும் விவசாயிகள் போராட்டத்துக்கு பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
அந்தவகையில் மயிலாடுதுறையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் பிஎஸ்என்எல் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அப்போது, வேளாண்மை மசோதாவுக்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும், வேளாண் மசோதாவை திரும்பப் பெறக் கோரி மத்திய அரசை வலியுறுத்தியது மட்டுமின்றி, மத்திய அரசுக்கு கண்டனமும் தெரிவித்து முழக்கமிட்டனர்.