தமிழ்நாடு

tamil nadu

By

Published : Sep 25, 2019, 10:30 AM IST

ETV Bharat / state

மா.கம்யூ மாவட்ட செயற்குழு உறுப்பினர் கைதை கண்டித்து போராட்டம்

நாகை: குத்தாலம் பகுதியில் சில தினங்களுக்கு முன்பு வன்முறையை தூண்டும் விதமாக பேசியதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டசெயற்குழு உறுப்பினர் கைது செய்யப்பட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அக்கட்சி நிர்வாகிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

marxist

நாகை மாவட்டம் குத்தாலம் பகுதியில் சில தினங்களுக்குமுன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சார்பில் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஸ்டாலின் என்பவர் வன்முறையைத் தூண்டும்விதமாக பேசியதாகக் கூறி காவல் துறையினர் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதற்கு கண்டனம் தெரிவித்து அக்கட்சியின் நிர்வாகிகள் மயிலாடுதுறை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஒன்றிய செயலாளர் மேகநாதன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் மயிலாடுதுறை காவல் துறையினருக்கு எதிராகக் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

marxist

பொய்வழக்குப் போடும் காவல் துறையைக் கண்டித்து மயிலாடுதுறை காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தை வருகின்ற 27ஆம் தேதி முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்போவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: சித்தூர் ஆறு வழிச்சாலை திட்டத்தை கைவிட வேண்டும் - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டம்!

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details