நாகை மாவட்டம் குத்தாலம் பகுதியில் சில தினங்களுக்குமுன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சார்பில் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஸ்டாலின் என்பவர் வன்முறையைத் தூண்டும்விதமாக பேசியதாகக் கூறி காவல் துறையினர் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதற்கு கண்டனம் தெரிவித்து அக்கட்சியின் நிர்வாகிகள் மயிலாடுதுறை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஒன்றிய செயலாளர் மேகநாதன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் மயிலாடுதுறை காவல் துறையினருக்கு எதிராகக் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.