நாகை மாவட்டம் வாஞ்சூர் சோதனை சாவடியில், இன்று மதுவிலக்கு காவலர்கள் வாகனச் சோதனையில் ஈடுபட்டுகொண்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக சந்தேகப்படும் படியாக வந்த சொகுசு காரை சோதனை செய்வதற்காக வழிமறித்தனர்.
அந்தக் கார் காவலர்களை கண்டதும், நிற்காமல் மின்னல் வேகத்தில் சென்றது. இதையடுத்து நாகூர் கிழக்கு கடற்கரை சாலையில் அக்காரை காவலர்கள் மடக்கி பிடித்தனர்.