தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மத்தியப் பிரதேசத்தில் சிக்கித் தவிக்கும் மாணவர்களை மீட்க கோரிக்கை! - Karaikal Jawahar Navodaya Vidyalaya

நாகப்பட்டினம்: மத்தியப் பிரதேசத்தில் சிக்கித் தவிக்கும் காரைக்கால் மாணவர்களை மீட்க வேண்டும் என பெற்றோர்கள் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஜவகர் நவோதயா வித்யாலயா காரைக்கால் ஜவகர் நவோதயா வித்யாலயா பள்ளி பரிமாற்ற முறை School transfer system Karaikal Jawahar Navodaya Vidyalaya Jawahar Navodaya Vidyalaya
Karaikal Jawahar Navodaya Vidyalaya

By

Published : Mar 28, 2020, 1:08 PM IST

மத்திய அரசின் கீழ் செயல்படும் பள்ளி ஜவகர் நவோதயா வித்யாலயா. இது இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் செயல்பட்டுவருகிறது. இது கிராமப்புற மாணவர்களுக்கான உண்டு, உறைவிடப் பள்ளியாகும். இங்கு பயிலும் மாணவர்களுக்குப் பல்வேறு விதமான கற்பித்தல் முறைகள் பின்பற்றப்படுகின்றன.

அதன் ஒரு முறையாக, மாணவர்கள் பல்வேறுக் கலாசாரங்களை அனுபவப்பூர்வமாக கற்கும் வகையில் "பள்ளி பரிமாற்ற முறை உள்ளது". இதில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள் மற்ற மாநிலங்களில் உள்ள வேறு ஒரு நவோதயா பள்ளிக்கு ஒரு வருட காலம் அனுப்பப்படுகிறார்கள்.

தற்போது கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, இந்தியா முழுவதிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து தொழிற்சாலைகள், அலுவலகங்கள், கல்விக்கூடங்கள் என அனைத்தும் மூடப்பட்டுள்ளன.

இந்நிலையில், புதுச்சேரி மாநிலம், காரைக்காலில் உள்ள ராயன்பாளையத்தில் செயல்பட்டுவரும் ஜவஹர் நவோதயா வித்யாலயா பள்ளியில், காரைக்கால் மாவட்டத்திலிருந்து ஒன்பதாம் வகுப்பு பயிலும் 17 மாணவ, மாணவிகள் பள்ளி பரிமாற்ற திட்டத்தின் கீழ் மத்தியப் பிரதேசத்தில் உள்ள ஜவஹர் நவோதயா வித்யாலயா பள்ளியில் பயின்று வருகின்றனர்.

இதுபோல், மத்தியப் பிரதேச பள்ளியிலிருந்து காரைக்காலில் மாணவர்கள் பயின்று வந்தனர். இந்தச் சூழலில் கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக காரைக்காலில் செயல்பட்டுவரும் ஜவஹர் நவோதயா வித்யாலயா பள்ளி மூடபட்டு அங்கு பயின்ற மாணவ மாணவிகள் வீட்டிற்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து மத்தியப் பிரதேசத்திலிருந்து இங்கு பயின்று வந்த மாணவ, மாணவிகளை பள்ளி நிர்வாகம் மத்தியப் பிரதேசத்தில் கொண்டு சேர்த்துள்ளனர். ஆனால் அங்கு பயிலும் காரைக்கால் மாவட்டத்தைச் சேர்ந்த 17 மாணவ-மாணவிகளை இங்கு அழைத்து வரவில்லை.

இதனால், அச்சமடைந்த மாணவர்களின் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை உடனடியாகத் தங்களிடம் கொண்டுவந்து சேர்ப்பதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என காரைக்கால் மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்துள்ளனர்.

மாணவர்களை மீட்க கோரிக்கை விடுக்கும் பெற்றோர்

ஆனால், துணை ஆட்சியர் பாஸ்கரன், "தங்கள் கோரிக்கைகளை செவிமடுத்து கேட்காமல், ஐந்து கிலோமீட்டர் தொலைவிலுள்ள தனது குடும்பத்தையே விட்டு பிரிந்து இருக்கிறேன். நீங்கள் என்னவோ நெடுந்தொலைவில் இருக்கும் அவர்களைப் பிரிந்து இருப்பதற்கு வருத்தப்படுகிறீர்கள்" என உதாசீனப்படுத்தியதாக வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

இது குறித்து பெற்றோர்கள் கூறுகையில், "கரோனா பாதிப்பால் யாருக்கு எப்போது என்ன ஆகுமென்று தெரியாத சூழலில், தங்கள் குழந்தைகளை நாங்கள் கண்ணில் பார்க்காமல் சென்றுவிடுவோமோ என்ற அச்சமும், கவலையும் இருக்கிறது.

எங்கள் குழந்தைகளை எங்களிடம் சேர்க்க மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து சிறப்பு விமானம் மூலம் அழைத்து வரவேண்டும்" என கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க:வெளிநாடு சென்று திரும்பியவர்களின் வீட்டில் நோட்டீஸ்

ABOUT THE AUTHOR

...view details