தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சாதி மறுப்புத் திருமணம்: மாவட்ட காவல் அலுவலகத்தில் காதல் ஜோடிகள் தஞ்சம் - சாதி மாறி திருமணம் செய்துகொண்ட காதல் ஜோடிகள் எஸ் பி அலுவலகத்தில் தஞ்சம்

நாகப்பட்டினம்: சாதி மறுப்புத் திருமணம் செய்துகொண்ட, காதல் ஜோடிகள் பாதுகாப்பு கேட்டு மணக்கோலத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தஞ்சம் அடைந்தனர்.

inter caste married couple seek protection in nagapattinam SP office
inter caste married couple seek protection in nagapattinam SP office

By

Published : Feb 7, 2020, 5:10 PM IST

நாகப்பட்டினம் மாவட்டம், தரங்கம்பாடி பகுதியை அடுத்துள்ள ஆத்துபாக்கம் பகுதியைச் சேர்ந்தவர், சிவபிரகாஷ். ஆதிதிராவிடர் சமூகத்தைச் சேர்ந்த இவர், சௌமியா என்ற மாற்று சமூகத்தைச் சேர்ந்த பெண்ணை ஐந்து ஆண்டுகளாகக் காதலித்து வந்துள்ளார்.

இந்நிலையில் காதல் விவகாரம் சௌமியா வீட்டிற்கு தெரிந்த நிலையில், அவரது பெற்றோர்கள் இருவரது காதலுக்கும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்தச் சூழலில் சௌமியாவிற்கும் அவரது தாய்மாமாவிற்கும் திருமணம் நடைபெறவிருந்த நிலையில், வீட்டில் இருந்து வெளியேறிய சௌமியா, சிவ பிரகாஷை அருகில் இருந்த கோயிலில் வைத்து திருமணம் செய்துகொண்டார்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் காதல் ஜோடிகள் தஞ்சம்

இதைத்தொடர்ந்து உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக, நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இருவரும் மணக்கோலத்தில் தஞ்சம் அடைந்தனர். திருமணம் செய்துகொண்ட காரணத்தால், தங்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று இருவரும் காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனுவையும் அளித்தனர்.

இதையும் படிங்க: கொரோனா வைரஸ் விழிப்புணர்வு - மாணவர்கள் பங்கேற்பு

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details