தமிழ்நாடு

tamil nadu

தேசியக் கொடியை ஏற்றிய தூய்மைப் பணியாளர்!

By

Published : Aug 15, 2020, 1:04 PM IST

மயிலாடுதுறை: தனியார் பள்ளியில் தூய்மைப் பணியாளர் ஒருவர் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

தேசியக் கொடியை ஏற்றிய தூய்மைப் பணியாளர்
தேசியக் கொடியை ஏற்றிய தூய்மைப் பணியாளர்

மயிலாடுதுறையில் 74ஆவது சுதந்திர தினம் தனியார் பள்ளி ஒன்றில் விமரிசையாக நடைபெற்றது.

இதில் ஆசிரியர்கள் கரோனா காலத்தில் முன் களப் பணியாளர்களின் அயராத உழைப்பை பாராட்டும் வகையில் நகராட்சி தூய்மைப் பணியாளரை வைத்து தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார்கள்.

பள்ளி முதல்வர் முரளிதரன் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் ஆசிரியர்கள், கரோனா தடுப்பு நடவடிக்கைகளான முகக்கவசம் அணிதல், தகுந்த இடைவெளி பின்பற்றுதல் உள்ளிட்டவற்றை பின்பற்றினர்.

இதையும் படிங்க: சுதந்திர தினத்தை முன்னிட்டு மின் விளக்குகளால் ஜொலித்த சென்னை விமான நிலையம்!

ABOUT THE AUTHOR

...view details