தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jun 11, 2019, 11:27 PM IST

ETV Bharat / state

ஐந்து ஆண்டுகளாக சாலையில் வீணாகும் குடிநீர்; மக்கள் வேதனை!

நாகை: மயிலாடுதுறையில் கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் குழாயில் இருந்து ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக சாலையில் குடிநீர் வழிந்தோடி வீணாவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

ஐந்து ஆண்டுகளாக குடிநீர் சாலையில் வீணடிப்பு; மக்கள் வேதனை!

நாகை கொள்ளிடம் ஆற்றில் பல்வேறு இடங்களில் ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டு போர்வெல் மூலம் குழாய்கள் வழியாக கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ் மயிலாடுதுறை, தரங்கம்பாடி, வேதாரண்யம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு குடிநீர் வழங்கப்படுகிறது.

மயிலாடுதுறைக்கு வரும் குடிநீர் குழாயில் திருவிழந்தூர் மெயின் ரோட்டில் உடைப்பு ஏற்பட்டு கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக குடிநீர் சாலையில் வழிந்தோடி வீணாவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

ஐந்து ஆண்டுகளாக சாலையில் குடிநீர்வீணடிப்பு; மக்கள் வேதனை!

இது குறித்து மயிலாடுதுறை நகராட்சியிடம் புகார் தெரிவித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. கஜா புயலுக்கு பின் மழை இல்லாமல் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் குடிநீர் வீணாக்கப்படுவதாகவும், சாலைகளில் தண்ணீர் தேங்கி பள்ளம் ஏற்பட்டு விபத்துகள் ஏற்படுவதாகவும் பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details