நாகை மாவட்டம், நாகூர், பெருமாள் கீழவீதியைச் சேர்ந்தவர் காமராஜ் (70). டைலரான இவர் வீட்டிலேயே தையல் மிஷின் வைத்து தொழில் செய்து வருகிறார். தீபாவளி நேரம் என்பதால் காமராஜ் இரவு, பகல் பாராமல் போதிய அளவு தூக்கமின்றி வாடிக்கையாளர்களின் துணியை தைத்து வந்துள்ளார்.
இந்நிலையில், இவருக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளார். மயக்கமடைந்த அவரை மனைவி மாலா (65), மகன் சத்யசீலன் ஆகியோர் நாகை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்து சேர்த்தனர். அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் காமராஜ் வரும் வழியிலேயே மாரடைப்பால் உயிரிழந்ததாகத் தெரிவித்தார். இதனைக் கேட்ட அவரது மனைவி மாலாவும் அதிர்ச்சியில் மயக்கமடைந்துள்ளார்.