நாகப்பட்டினம் மாவட்டம் அந்தணப்பேட்டை அருகில் சுனாமி குடியிருப்பைச் சேர்ந்தவர்கள், பழனிவேல் (55) - ராஜலட்சுமி (50) தம்பதி.
இன்று (அக்.19) காலை ராஜலெட்சுமி அவரது வீட்டின் கொள்ளை புறத்தில் சமையலுக்கான வேலைகளை செய்துகொண்டிருந்தார். அப்போது அவர்கள் வீட்டருகிலிருந்த உயர் மின்னழுத்த கம்பி அறுந்து கொள்ளை புறத்தில் விழுந்துள்ளது.
அறுந்து விழுந்த உயரழுத்த மின் கம்பி
அறுந்து விழுந்த வயரை ராஜலட்சுமி வெளியில் தூக்கிவீச முயன்றபோது மின்சாரம் தாக்கியது. சத்தம் கேட்டு ஓடிவந்த கணவர் பழனிவேல் மனைவியைக் காப்பாற்ற முயன்றபோது அவரையும் மின்சாரம் தாக்கியது.